Farhana Abdulla..
பர்ஹானா அப்துல்லா முக நூலில்
தீரன் ஆர்.எம் நௌஸாத் அவர்களின்.......
முத்திரையிடப்பட்ட மது
பத்திரமாய் இன்றென் கரம் சேர்ந்தது.வாசிப்பில் நேசம் கொள்ள இன்னொரு வரவு.
படைத்தோனிடம் பாவமீட்சியும் பயகம்பர் நாயகத்தின் நேசக் காட்சியும் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிக் காட்டுகின்றன..
அத்துடன் நிதர்சன உலகின் நிஜங்களைப் படம்பிடித்த நிகழ்வுகள் அழகே....
"புள்ளியின் சுழற்சியில்
வட்டம் வடிவமாகும்
காலச் சுழற்சியில்
வயதொன்று முடியும்..
வயதின் சுழற்சியில் வாழ்வு முடியும்"
"நான் எழுதிய வானத்தைச் சுருட்டி
காது குடைகிறேன்
அதில் எழுதிய
என் இளமைப் பேனா உலர்ந்து விட்டது"
அருமையான பனுவலுக்கு அன்பின் நன்றிகள்.
மக்கொனையூராள்
No comments:
Post a Comment