பாவேந்தல் பாலமுனை பாறூக் முகநூலில்
முத்திரை யிட்ட மதுவுண்டு பூரித்தேன்
அற்புதமாய் வாய்த்த அமுதமது-சத்தியமாய்
பேரின்பத் தேனைப் பருகத் தரவெனவே
ஊறி வருகின்ற ஊற்று!
முகம்மதுவைப் பாடிச் சுவைக்கும் கவிவரியால்
அகமினிக்கச் செய்கின்ற அருமை.-
செகமெங்கும்
ஞான ஒளிபாய்ச்சும் பானம்
தருகின்ற
ஏனம்;இதற்குண்டோ ஈடு?
ஆன்மீகச் சிந்தனையில் ஆழ்மனதைச் செப்பமிட
'நான்'போக்க வேண்டுமெனும் நற்கருத்தைத்- தேன்கவியாய்க்
கொண்டு மலர்ந்திருக்கும் தங்கக் கவியேடு
தந்தவனைப் போற்றுகிறோம் நாம்!
No comments:
Post a Comment