மருதூர் ஜமால்தீன்
முகநூலில்
கவிதை மலர்கள் தொகுதி
களாக மலரும் இலக்கிய கா
லமிது வரவேற்போம்
ஆனாலும் ஆன்மீகம்
அருகி அல்லது மறக்கடிக்கப்
பட முனையும் இன்னுமொரு
காலமிது,
நிலைமை எதுவானாலும்
இலக்கியத்தில் ஆன்மீக
மணங்களைத்தெளித்து
வளர்த்தெடுக்கப்பட்டதே
எமது மூதாதையரின்
கவிதைஞானம்
இஸ்லாமிய தமிழ் இலக்கி
யத்தில் ஆரம்பகாலந்தொட்டு கடந்த
நூற்றாண்டு இறுதியிலும்
மௌலானா ரூமி(ரஹ்)
அல்லாமா இக்பால்(ரஹ்)
போன்றோர் படைத்தளித்த
இலக்கியங்கள் இதுபோன்ற
பல்வேறு இலக்கிய நூல்கள்
இஸ்லாமிய உலகத்தை தட்டி
யெழுப்பி ஆன்மீகத்தைப்
பொழிந்து மனிதவாழ்வைச்
செம்மைப்படுத்தியதை
மறக்க முடியாது
அந்தவகையில் இன்று
எத்தனை கவிதை நூல்கள்
மலர்ந்தாலும் மானுடவாழ்
வின் வெற்றி ஆன்மீகப்
பாதையே என்பதை நிறுவும்
ஆர் எம் நௌஷாத்தின்
முத்திரையிடப்பட்ட மதுவை
அருந்தியவர்கள் அதில்
மயங்காமல் இருக்கமுடியாது
பல்வேறு நாவல் இலக்கி
யங்களை சமூமயப்படுத்திய
நௌஷாத்திடம் இவ்வளவு
ஆன்மீகமா என வியந்திட
வைக்கிறது இந்நூல்,
நண்பர் நௌஷாத்தின்
"தீரா வேட்கை" யில் நானும்
நனைந்தேன்
உலகம் வெறுத்து
உணவு ஒறுத்து
உச்சிப்பாறைமீது நான்
தக்பீர் கட்டித்
தனித்து நிற்கவோ,,.
ஹிறாக் குகைக்குள்ளும்
சுறா வயிற்றுக்குள்ளும்
சுருண்டு நான்
ஸுஜுதில் கிடக்கவோ
துர்ஷீனா மலையேறித்
தூக்கமின்றி
நாற்பது இரவு
நடு இருப்பில்
நானிருக்கவோ,,,
அடர்வனம் நடுவே
இடர்தரு பிராணிகளின்
இம்சை பொறுத்து
ருக்கூஹ் செய்தவாறே
ரூஹை விடவோ,,,
என்ன செய்தால்
எனக்கருள்வாய்
இறைவா,,,?
என்ற தீரரின் தீரா வேட்கையிது
எமது உணர்வுகளைத்
தட்டியெழுப்பி எனக்குள்ளும்
ஆன்மீக விதையைத்தூவிய
நண்பர் நௌஷாத் அவர்
களுக்கு வாழ்த்து மலர்களைத்தூவி,,,,