Saturday, October 22, 2022

மருதூர் ஜமால்தீன்

 மருதூர் ஜமால்தீன்

முகநூலில்

கவிதை மலர்கள் தொகுதி

களாக மலரும் இலக்கிய கா

லமிது வரவேற்போம்

     ஆனாலும் ஆன்மீகம்

அருகி அல்லது மறக்கடிக்கப்

பட முனையும் இன்னுமொரு

காலமிது,

    நிலைமை எதுவானாலும்

இலக்கியத்தில் ஆன்மீக

மணங்களைத்தெளித்து

வளர்த்தெடுக்கப்பட்டதே

எமது மூதாதையரின் 

கவிதைஞானம்

    இஸ்லாமிய தமிழ் இலக்கி

யத்தில் ஆரம்பகாலந்தொட்டு கடந்த

நூற்றாண்டு இறுதியிலும்

மௌலானா ரூமி(ரஹ்)

அல்லாமா இக்பால்(ரஹ்)

போன்றோர் படைத்தளித்த

இலக்கியங்கள் இதுபோன்ற

பல்வேறு இலக்கிய நூல்கள்

இஸ்லாமிய உலகத்தை தட்டி

யெழுப்பி ஆன்மீகத்தைப்

பொழிந்து மனிதவாழ்வைச்

செம்மைப்படுத்தியதை

மறக்க முடியாது

    அந்தவகையில் இன்று

எத்தனை கவிதை நூல்கள்

மலர்ந்தாலும் மானுடவாழ்

வின் வெற்றி ஆன்மீகப்

பாதையே என்பதை நிறுவும்

ஆர் எம் நௌஷாத்தின்

முத்திரையிடப்பட்ட மதுவை

அருந்தியவர்கள் அதில்

மயங்காமல் இருக்கமுடியாது 

    பல்வேறு நாவல் இலக்கி

யங்களை சமூமயப்படுத்திய

நௌஷாத்திடம் இவ்வளவு

ஆன்மீகமா என வியந்திட

வைக்கிறது இந்நூல்,

     நண்பர் நௌஷாத்தின்

"தீரா வேட்கை" யில் நானும்

நனைந்தேன்


உலகம் வெறுத்து

உணவு ஒறுத்து

உச்சிப்பாறைமீது நான்

தக்பீர் கட்டித்

தனித்து நிற்கவோ,,.


ஹிறாக் குகைக்குள்ளும்

சுறா வயிற்றுக்குள்ளும்

சுருண்டு நான்

ஸுஜுதில் கிடக்கவோ


துர்ஷீனா மலையேறித்

தூக்கமின்றி

நாற்பது இரவு

நடு இருப்பில்

நானிருக்கவோ,,,


அடர்வனம் நடுவே

இடர்தரு பிராணிகளின்

இம்சை பொறுத்து

ருக்கூஹ் செய்தவாறே

ரூஹை விடவோ,,,


என்ன செய்தால்

எனக்கருள்வாய்

இறைவா,,,?


என்ற தீரரின் தீரா வேட்கையிது


எமது உணர்வுகளைத்

தட்டியெழுப்பி எனக்குள்ளும்

ஆன்மீக விதையைத்தூவிய

நண்பர் நௌஷாத் அவர்

களுக்கு வாழ்த்து மலர்களைத்தூவி,,,,

Monday, October 10, 2022

ரியாஸ் குரானா












 

மக்கொனயூராள்

 Farhana Abdulla..

பர்ஹானா அப்துல்லா முக நூலில்


தீரன் ஆர்.எம் நௌஸாத் அவர்களின்.......

முத்திரையிடப்பட்ட மது

பத்திரமாய் இன்றென் கரம் சேர்ந்தது.வாசிப்பில் நேசம் கொள்ள இன்னொரு வரவு.

படைத்தோனிடம் பாவமீட்சியும் பயகம்பர் நாயகத்தின் நேசக் காட்சியும் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிக் காட்டுகின்றன..

அத்துடன் நிதர்சன உலகின் நிஜங்களைப் படம்பிடித்த நிகழ்வுகள் அழகே....


"புள்ளியின் சுழற்சியில்

வட்டம் வடிவமாகும்

காலச் சுழற்சியில்

வயதொன்று முடியும்..

வயதின் சுழற்சியில் வாழ்வு முடியும்"


"நான் எழுதிய வானத்தைச் சுருட்டி

காது குடைகிறேன்

அதில் எழுதிய

என் இளமைப் பேனா உலர்ந்து விட்டது"


அருமையான பனுவலுக்கு அன்பின் நன்றிகள்.


மக்கொனையூராள்




Monday, October 3, 2022

பாலமுனை பாறூக்

 பாவேந்தல் பாலமுனை பாறூக் முகநூலில்



முத்திரை யிட்ட  மதுவுண்டு பூரித்தேன்

அற்புதமாய் வாய்த்த அமுதமது-சத்தியமாய்

பேரின்பத்  தேனைப் பருகத் தரவெனவே

ஊறி வருகின்ற ஊற்று!


முகம்மதுவைப் பாடிச் சுவைக்கும் கவிவரியால் 

அகமினிக்கச் செய்கின்ற  அருமை.-

செகமெங்கும்

ஞான ஒளிபாய்ச்சும்   பானம்

தருகின்ற 

ஏனம்;இதற்குண்டோ ஈடு?


ஆன்மீகச் சிந்தனையில்  ஆழ்மனதைச் செப்பமிட

'நான்'போக்க வேண்டுமெனும்  நற்கருத்தைத்- தேன்கவியாய்க்

கொண்டு மலர்ந்திருக்கும்   தங்கக் கவியேடு

தந்தவனைப்  போற்றுகிறோம் நாம்!